இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை.. வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிப்பு

0 3291
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை.. வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிப்பு

சிட்னி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ரிஷப் பண்ட் ஆகியோர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் 7ம் தேதி தொடங்குகிறது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட 5 வீரர்கள் உள்ளிட்ட அனைத்து வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் வீரர்கள் 3-வது டெஸ்டில் பங்கேற்பதில் சிக்கல் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments