சென்னை கடற்கரை காமராசர் சாலையில் இன்றும் போக்குவரத்துக்குத் தடை விதிப்பு

0 1916
சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் இன்றும் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் இன்றும் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னைக் கடற்கரையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடத் தமிழக அரசு தடை விதித்தது. இதனால் டிசம்பர் 31 இரவு முதல் கடற்கரை காமராசர் சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்வதைத் தடுக்க இரு நாட்களாகக் காவல்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இன்று காலையில் நூற்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் காமராசர் சாலையில் இங்குமங்கும் சென்றுகொண்டிருந்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவலர்கள் இருசக்கர வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர். தலைக்கவசம், முகக்கவசம் அணிந்திருந்தோரை எச்சரித்து அனுப்பினர். மற்றவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments