முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்.. முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டதால் செபி நடவடிக்கை

0 3511
தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பாக ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 25 கோடி ரூபாயும், முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாயும்,  நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு 20 கோடி ரூபாயும்,  மும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு 10 கோடிரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments