கொரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்த 3 நிறுவனங்கள் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைமையில் இன்று கூட்டம்

0 1147
கொரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்த 3 நிறுவனங்கள் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைமையில் இன்று கூட்டம்

மூன்று நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துகளின் அவசரப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக், பைசர் ஆகிய மூன்று நிறுவனங்களும் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துகளின் அவசரப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் விண்ணப்பித்துள்ளன.

இதன் பரிசீலனை தொடங்கியுள்ள நிலையில், ஒப்புதல் அளிப்பது தொடர்பாக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் சோமானி தலைமையில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments