புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி கடற்கரையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் திரண்ட மக்களை விரட்டி அடித்த போலீசார்

0 5072

புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட மக்கள் கூட்டம் அதிகமாக சேர்ந்ததால் காவல்துறையினர் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், கடற்கரை முழுவதும் 10 இடங்களில் தடுப்பு அமைக்கப்பட்டு ஒரு தடுப்பில் 1000பேர் வரை அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அனைத்து தடுப்புகளும் நிரம்பிய நிலையில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடியதால் பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் அவர்களை கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் அவர்கள் போகாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments