ஆசியாவின் பெரும்பணக்காரர் ஆனார் தண்ணீர் பாட்டில் நிறுவன அதிபர் சோங் சான்சன்..!

0 3245
ஆசியாவின் பெரும்பணக்காரர் ஆனார் தண்ணீர் பாட்டில் நிறுவன அதிபர் சோங் சான்சன்..!

சீனாவில் தண்ணீர் பாட்டில் நிறுவன அதிபரான சோங் சான்சன் முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சோங் சான்சன் வாண்டாய் பயாலஜிக்கல் பார்மசி, நோங்பு ஸ்பிரிங் ஆகிய நிறுவனங்களின் அதிபர் ஆவார். இவரது நிறுவனங்கள் ஊடகம், காளான் வளர்ப்பு, நலவாழ்வு ஆகிய துறைகளிலும் காலூன்றியுள்ளன.

புளூம்பெர்க் நிறுவனத்தின் கணக்குப்படி இந்த ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 5 லட்சத்து 68 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் சொத்து மதிப்பில் இந்தியாவின் முகேஷ் அம்பானியை முந்தியுள்ள சோங் சான்சன், ஆசியாவின் பெரும்பணக்காரராக விளங்குகிறார்.

உலக அளவில் பதினோராவது பெரும்பணக்காரராக விளங்குகிறார். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments