இங்கிலாந்து புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவும் வாய்ப்பு குறைவு- ஏய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கருத்து

0 5989
இங்கிலாந்து புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவும் வாய்ப்பு குறைவு- ஏய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கருத்து

கொரோனா வைரஸ் சில நாடுகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வீரியம் மிக்கதாகப் பரவி வருவதாக ஏய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வீரியம் மிக்க வைரஸ் அதிகளவில் பரவக்கூடியதாக உள்ளது. எனவே அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விமானப்போக்குவரத்துக்கும் தடை விதித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் கோவிட் பாதிப்புகள் குறைந்து வருவதாகவும் கூறியுள்ள அவர், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments