வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு- மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

0 3738
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு- மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

னிநபர்கள் 2019 - 2020 ஆம் நிதி ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வரி செலுத்துவோர் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 29 ஆம் தேதி நிலவரப்படி 4 கோடியே 54 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments