கொரோனா குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய சீன பெண் பத்திரிகையாளருக்கு 4 ஆண்டு சிறை

0 3134
கொரோனா குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய சீன பெண் பத்திரிகையாளருக்கு 4 ஆண்டு சிறை

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் 37 வயதான பத்திரிகையாளர் ஜாங் ஜான் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வுகானில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்றார்.

அங்கு மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், சீன அரசின் மெத்தன போக்கு தொடர்பான பல உண்மை செய்திகளை வெளியிட்டார்.

மேலும் தனது செய்திகளை எஸ்எம்எஸ், வீடியோ, வீசாட், டிவிட்டர், யூடியூப் மூலம் உலகம் முழுவதும் பரவச் செய்தார். இதனால் கொரோனா உண்மைகளை மறைக்க தடையாக இருந்ததால் ஜாங் ஜானை சீன அரசு கைது செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments