பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 4 பேரின் ரத்த மாதிரிகளில் வித்தியாசம் - பூனே ஆய்வகம், மத்திய அரசுக்கு தகவல்

0 31391

பிரிட்டனில் இருந்து கொரோனா பாதிப்புடன் தமிழகம் திரும்பிய 4 பேரின் ரத்த மாதிரிகளில் வித்தியாசம் இருப்பதாக, பூனே ஆய்வகம், மத்திய அரசுக்கு தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 13 பேரின் ரத்த மாதிரிகளை ஆராய்ந்த புனேவில் உள்ள ஆய்வகத்தில் அதில் நான்கு பேரின் ரத்த மாதிரிகளில் சிறிது வேறுபாடு உள்ளதாகவும், அவற்றை மீண்டும் பரிசோதிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகளை பெற்ற பிறகே, பிரிட்டனில் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா தொற்று, இந்தியாவிலும் பரவி உள்ளதா என்பது குறித்து தெரியவரும் என்று தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments