பிரசாத் ஸ்டூடியோவுக்கு இன்று செல்கிறார் இளையராஜா

0 2714
பிரசாத் ஸ்டூடியோவுக்கு இன்று செல்கிறார் இளையராஜா

சைஞானி இளையராஜா தாம் 40 ஆண்டுகளாக இசைப்பணி செய்த சென்னை பிரசாத் ஸ்டூடியோவுக்கு மீண்டும் இன்று செல்கிறார்.

அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஸ்டூடியோ நிர்வாகம் அவரை அனுமதிக்காத நிலையில், வைத்திருந்த பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சமரசம் ஏற்படுத்தியதை அடுத்து நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜாவை அனுமதிக்கவேண்டும்.

அவர் பயன்படுத்திய இடத்தில் தியானம் செய்யவும், பொருட்களை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். என்று உத்தரவிட்டார்.
அதன்படி இன்று இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments