விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா; பெரியார் ஒளி விருது அருணனுக்கு வழங்கப்பட்டது

0 4307
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா; பெரியார் ஒளி விருது அருணனுக்கு வழங்கப்பட்டது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

அம்பேத்கர் சுடர் விருதை எழுத்தாளர் காஞ்சா ஐலையாவுக்கு வழங்கப்பட்டது, பெரியார் ஒளி விருது பேராசிரியர் அருணனுக்கும், காமராஜர் கதிர் விருது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் வழங்கப்பட்டது.

அயோத்தி தாசர் ஆதவன் விருது பாலசுந்தரத்துக்கும், காயிதேமில்லத் பிறை விருது உமர் பாரூக்குக்கும் வழங்கப்பட்டது. இதேபோல் செம்மொழி ஞாயிறு விருது பாலகிருஷ்ணனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments