தமிழக அரசு அறிவித்துள்ள ரூ 2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் இன்று முதல் வீடு வீடாக விநியோகம்

0 3662
தமிழக அரசு அறிவித்துள்ள ரூ 2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் இன்று முதல் வீடு வீடாக விநியோகம்

தமிழக அரசு அறிவித்துள்ள ரூபாய் 2500 நிவாரணத் தொகையுடன் கூடிய பொங்கல் தொகுப்புக்கான டோக்கனை இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்ய உள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் என தினமும் 200 பேருக்கு மிகாமல் பொங்கல் டோக்கன் வழங்க வேண்டும் என்றும், பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை இன்று முதல் 30ஆம் தேதிக்குள் வீடு தேடிச் சென்று வழங்க வேண்டும் எனவும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ஆம் தேதியன்று விநியோகம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments