அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 3ல் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை

0 5505
வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஜனவரி 3ஆம் தேதி மதுரை வருமாறு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஜனவரி 3ஆம் தேதி மதுரை வருமாறு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் தனது பங்கு நிச்சயம் இருக்கும் என தெரிவித்திருந்த அழகிரி, திமுகவில் இணைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அதன்படி தனது செயல்பாடுகள் இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 3ஆம் தேதி மதுரை பாண்டிக்கோவில் துவாரகா பேலஸ் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் தமிழகம் முழுவதுமுள்ள தனது ஆதரவாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments