திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தங்க தேர் வீதி உலா

0 5589
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தங்க தேர் வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தங்க தேர் வீதி உலா நடைபெற்றது.

அங்கு அதிகாலை 4.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களின் தரிசனத்துக்குப் பின் உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த தங்க ரதத்தை பெண் பக்தர்களே இழுத்துச் செல்வது வழக்கம் என்ற நிலையில், தேவஸ்தான பெண் ஊழியர்கள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு நோய்தொற்று பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனர்.

நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு வழிபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments