கிறிஸ்துமஸ் தாத்தா போல அலங்கரித்த யானைகள் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு முக்கவசங்கள் விநியோகம்
தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் தாத்தா போல அலங்கரித்து அழைத்து வரப்பட்ட யானைகள் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.
ஒரு குட்டி யானை மற்றும் 3 பெரிய யானைகள், சிவப்பு, வெள்ளை நிற துணி உடை, தலையில் தொப்பி மற்றும் துதிக்கை இருக்கும் பகுதியில் வெள்ளை நிற மாஸ்க் அணிவித்து அழைத்து வரப்பட்டிருந்தன.
பின்னர் பள்ளி வந்த குழந்தைகளுக்கு, அந்த யானைகள் மூலம் முகக்கவசங்கள் அளிக்கப்பட்டன.
இதேபோல் அந்த சாலை வழியே வாகனங்களில் சென்றோருக்கும் யானைகள் மூலம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.
Comments