ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அடுத்த வாரம் மத்திய அரசு அனுமதி?

0 2418

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அடுத்த வாரம் அவசரகால பயன்பாட்டுகான ஒப்புதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்டு என பெயரிட்டு, புனேயில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது. தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை முடிவுகள் மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எதிர்பார்த்தபடி ஒப்புதல் வழங்கப்பட்டால், இந்த தடுப்பூசிக்கு உலகில் ஒப்புதல் வழங்கும் முதல் நாடாக இந்தியா இருக்கும்.  இதனிடையே  ஃபைசர் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் அவசரகால அனுமதி வழங்குவது பற்றி மத்திய அரசு  பரிசீலித்து வருகிறது.

ஆனால் கோவிஷீல்ட் விலை குறைவானது என்பதுடன், இந்திய பருவநிலைக்கு பொருத்தமானது என்பதால் அதற்கே மத்திய அரசு முன்னுரிமை வழங்கும் எனவும் கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments