கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு

0 2678

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தேவாலயங்கள் பழுது நீக்கும் திட்டத்திற்கான தொகை 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தேங்காய்ப்பட்டணம் துறைமுகம் 77 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என்றும், ஆழ்கடலில் மீன்பிடிப்போருக்கு 75 விழுக்காடு மானியத்தில் செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments