இளையராஜாவை நிபந்தனைகளுடன் ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்கத் தயார் - உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் தகவல்

0 4173

ளையராஜாவை நிபந்தனைகளுடன், தங்கள் ஸ்டுடியோவுக்கு அனுமதிக்கத் தயார் என, சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரசாத் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, உரிமையியல் நீதிமன்றத்தில் 50 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

ஸ்டுடியோவில் இசையமைத்த நிலத்தை உரிமை கோர கூடாது; ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர், வழக்கறிஞர் ஆகியோருடன் மட்டுமே இளையராஜாவை அனுமதிக்க முடியும் என நிபந்தனைகளை விதிப்பதாக, பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிபந்தனைகளை ஏற்று, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என இளையராஜா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments