இங்கிலாந்தை போலவே பிற நாடுகளிலும் புதிய வகை கொரோனா பரவல் இருப்பது தெரியவந்தால் அந்த நாடுகளுடனான விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்படும் - அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

0 3032

ங்கிலாந்தை போலவே பிற நாடுகளிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் இருப்பது தெரியவந்தால் அந்த நாடுகளுடனான விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்படுமென இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments