தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 1230
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கோ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரிக் கடல் பகுதிகளுக்கும், நாளை மாலத்தீவுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments