சென்னை காசிமேட்டில் மீன்பிடிக்கப் புறப்பட்ட விசைப் படகு, தீப்பற்றி எரிந்து நாசம்

0 4855

சென்னை காசிமேட்டில், விசைப் படகு, டீசல் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் தீப்பற்றி எரிந்து நாசமானது. பூஜை போட்டு விட்டு விசைப்படகை இயக்கியபோது, எஞ்சின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதினால் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

விசைப்படகில் 6 ஆயிரத்து 500 லிட்டர் டீசல் இருந்த நிலையில், டீசல் குழாய் விரிசல் ஏற்பட்டு எரிபொருள் கசியத் தொடங்கியதால் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

ராயபுரத்தில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

படகின் மதிப்பு சுமார் 60 லட்சம் என்றும், அதை தயார்படுத்தியதற்கு செலவிட்ட தொகை, ஐஸ் கட்டிகள், டீசல், உணவுப்பொருட்கள் என 75 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments