சென்னை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் மருத்துவ கழிவுகளை வீசிய தனியார் இரத்த பரிசோதனை மையத்திற்கு அதிகாரிகள் எச்சரிக்கை

0 1695
சென்னை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் மருத்துவ கழிவுகளை வீசிய தனியார் இரத்த பரிசோதனை மையத்திற்கு அதிகாரிகள் எச்சரிக்கை

பயன்படுத்திய பஞ்சுகள், ரத்தம் உறைந்த கையுறைகள் போன்ற மருத்துவ கழிவுகளை சென்னை மாநகராட்சி குப்பைத் தொட்டியில், வீசிய தனியார் இரத்த பரிசோதனை மையத்திற்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

சென்னை ராயப்பேட்டை மாசிலாமணி தெருவில் உள்ள எர்லிக் லேப் என்ற நிறுவனம் மருத்துவ கழிவுகளை, எதிரில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டியில் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

துப்புறவு மேற்பார்வையாளர்கள் வந்து பார்த்து அதை உறுதி செய்தபின், சம்பந்தப்பட்ட ரத்த பரிசோதனை நிலையத்தினரை வரவழைத்து, இதை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments