ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலில் பகல் பத்து 5ம் திருநாள் : கவரிமான் கொண்டை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நம்பெருமாள்

0 1632
ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலில் பகல் பத்து 5ம் திருநாள் : கவரிமான் கொண்டை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நம்பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இன்று பகல் பத்து 5ம் திருநாளையொட்டி, நம்பெருமாள் கவரிமான் கொண்டை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் அக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் ஒரு அங்கமான பகல் பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

5ம் நாளான இன்று காலை மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் கவரிமான் கொண்டை, விமான பதக்கம் , ரத்தின அபயஹஸ்தம், ரத்தினகலிங்க தோளா, முத்துச்சரம் , பவளமாலை மற்றும் காசு மாலை அலங்காரத்தில் புறப்பட்டு, அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments