ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர், பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

0 6388

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் பெரியசோரகையில், சென்றாயப்பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பெரிய சோரகையில் உள்ள ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார். அங்கு சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.

 

கோவில் வளாகத்திற்கு வெளியே, முதலமைச்சருக்கான பிரச்சார வேனும் அங்கு தயாராக இருந்தது. கோவிலில் வழிபட்ட பிறகு, இருமருங்கிலும் திரண்டிருந்த மக்கள் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

 

பின்னர் திறந்த பிரச்சார வேனில், தன்னுடைய எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை பகுதியில் திறந்தவெளி வேனில் நின்றபடியே முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். ஜெயலலிதா மறைவுக்கு ஆட்சி நீடிக்குமா என பேசியவர்களுக்கு மத்தியில் பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் நடைபோடுவதாகக் குறிப்பிட்டார். புயல், கொரோனா என பல பேரிடர்களை அரசு வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.

தமிழக அரசு என்ன செய்தது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்பதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அரசு இதுவரை செய்துள்ள திட்டங்களை பட்டியலிட்டார்.

தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும், எடப்பாடிக்கு முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments