குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளம் ஆர்ப்பரித்து பாயும் நிலையில் பொதுமக்கள் குளிக்க தடை

0 1484
குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளம் ஆர்ப்பரித்து பாயும் நிலையில் பொதுமக்கள் குளிக்க தடை

குற்றாலப் பேரருவியில் இரண்டாம் நாளாக வெள்ளம் ஆர்ப்பரித்துப் பாயும் நிலையில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரு நாட்களாகப் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.

பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டித் தண்ணீர் விழுவதால் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் அதனை வேடிக்கை பார்த்துவிட்டு ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் குளிப்பதற்காகத் திரும்பிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments