சட்ட சிக்கல்களில் இருந்து தடுப்பூசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தேவை- சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவல்லா வேண்டுகோள்

0 1466
சட்ட சிக்கல்களில் இருந்து தடுப்பூசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தேவை- சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவல்லா வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசியால் ஏதாவது ஆபத்தான பின்விளைவுகள் ஏற்பட்டால், அது தொடர்பான சட்ட சிக்கல்களில் இருந்து, தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி உருவாக்கத்தில் உள்ள சவால்கள் குறித்த இணையதள விவாதம் ஒன்றில் அவர் பேசினார். தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த அச்சம் காரணமாக தடுப்பூசியை எடுத்துக் கொள்வது குறித்து மக்களிடம் தயக்கம் ஏற்பட்டால், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.

தடுப்பூசி நிறுவனங்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்குவது பற்றி அரசிடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments