இந்திய அணி 244 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கும் அதிர்ச்சி..!

0 4558
அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் திணறியது.

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் திணறியது.

அடிலெய்டு டெஸ்டில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்தது.

அதிக அளவாக விராட் கோலி 74 ரன்களும், புஜாரா 43 ரன்களும், அஜிங்கியா ரகானே 42 ரன்களும் எடுத்தனர். 4 விக்கெட் கையிருப்புடன் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி அடுத்த 11 ரன்களை எடுப்பதற்குள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

ஆஸ்திரேலிய அணியில் மிட்சல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணிக்கும் முதல் இன்னிங்சில் இந்தியப் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். தொடக்க வீரர்கள் உட்பட 4 பேர் ஒற்றை இலக்க ரன்களிலும் ஒருவர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

மார்னசும் கேப்டன் டிம் பெய்னும் ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 111 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு எட்டாவது மற்றும் ஒன்பதாவது விக்கெட்டையும் இழந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments