பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதிக்கலாமா ? ஸ்டுடியோ நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 2129
பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதிக்கலாமா ? ஸ்டுடியோ நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்து கொள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஸ்டூடியோ நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இளையராஜா தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது  ஸ்டூடியோ இருந்த இடத்தில் தற்போது மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், இளையராஜா உடமைகளை அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப் பட்டுள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் அதனை எடுத்து கொள்ளலாம் எனவும், அதன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தியானம் செய்ய அனுமதிப்பது குறித்து ஸ்டுடியோ நிர்வாகத்திடம் கேட்டு தெரிவிப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments