இயக்குனர் கரண் ஜோகருக்கு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன்

0 2014

பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் கரண் ஜோகர் விசாரணைக்கு ஆஜராகுமாறு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் போதைத் தடுப்புப் பிரிவினர் அந்த வழக்கில் தொடர்புடைய நடிகர்கள் ,நடிகைகள் உள்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கரண் ஜோகர் இரவு விருந்தில் போதைப் பொருள் தாராளமாகப் புழங்கியதாக கூறப்படும் விவகாரம் குறித்து விசாரிக்க கரண் ஜோகருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தப் பார்ட்டியில் தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், மலைக்கா அரோரா உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments