8 மாதங்களுக்கு பிறகு மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் பொதுமக்கள் வந்து செல்ல அனுமதி

0 1057
8 மாதங்களுக்கு பிறகு மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் பொதுமக்கள் வந்து செல்ல அனுமதி

சென்னையில் உள்ள மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகளுக்கு வந்து செல்ல 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை முதல் சிறியவர்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் வந்து கடற்கரைகளில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டி, கட்டுப்பாடு விதிகளை முறையாக கடைபிடிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியபடி இருந்தனர்.

அதேநேரத்தில் மெரினாவில் கடைகளை திறக்கவும், சர்வீஸ் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments