டெல்லி முற்றுகை போராட்டத்தில் சாலையைத் திறந்தது தொடர்பான முடிவில் பாரதிய கிசான் யூனியனில் கருத்து வேறுபாடு

0 1373

டெல்லி - நொய்டா சாலையில் முற்றுகையைக் கைவிட்டுப் போக்குவரத்துக்குத் திறந்தது தொடர்பாக விவசாய சங்கத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சில்லா என்னுமிடத்தில் பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனியன்று இந்த அமைப்பின் தலைவர் பானு பிரதாப் சிங், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு நடத்தியதை அடுத்துச் சுங்கச்சாவடி முற்றுகையைக் கைவிட்டுப் போக்குவரத்துக்காகச் சாலை திறந்துவிடப்பட்டது. இந்த அமைப்பின் உத்தரப்பிரதேசத் தலைவர் யோகேஷ் பிரதாப் முற்றுகையைக் கைவிட உடன்படவில்லை.

சாலையைத் திறக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யோகேஷ் பிரதாப், அமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் சிம்மேந்திரசிங், செய்தித் தொடர்பாளர் சதீஷ் சவுத்ரி ஆகியோர் சங்கத்தில் இருந்து விலகியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments