2021-2022 நிதியாண்டின் வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கும் பணி… பெருந்தொழிலதிபர்களுடன் நிதியமைச்சர் இன்று கலந்துரையாடல்

0 1731
2021-2022 நிதியாண்டின் வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கும் பணி… பெருந்தொழிலதிபர்களுடன் நிதியமைச்சர் இன்று கலந்துரையாடல்

தொழில்துறையினருடனான பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்துரையாடலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று தொடங்குகிறார்.

2021 - 2022 நிதியாண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சகம் தயாரிக்க உள்ளது. இதற்காகப் பல்வேறு துறையினருடனான கலந்துரையாடல் இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக டெல்லியில் அரங்கில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடல் இம்முறை காணொலியில் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் கலந்துரையாடலில் வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பெருந்தொழிலதிபர்களிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்களைக் கேட்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments