கடலூரில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள்... போலீசார் விசாரணை

0 5449

கடலூரில் கழிவுநீர் கால்வாயில் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் செல்லாத பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கழிவுநீர் கால்வாயில் கிடந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments