மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் முற்றுகையைக் கைவிட்ட விவசாயிகள்... டெல்லி - நொய்டா சாலையில் நேற்றிரவு முதல் தடையின்றி வாகனப் போக்குவரத்து

0 2347

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு நடத்திய பின் விவசாயிகள் முற்றுகையைக் கைவிட்டதால் டெல்லி - நொய்டா சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

நேற்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்ததுடன், முற்றுகையைக் கைவிடும்படி அரசு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்றிரவு நொய்டா - டெல்லி இடையே சில்லாவில் உள்ள சோதனைச்சாவடியில் முற்றுகையைக் கைவிட்ட விவசாயிகள் அருகில் உள்ள பூங்காவில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் நேற்றிரவு முதல் அந்தப் பாதையில் வழக்கம்போல் வாகனங்கள் தடையின்றிச் சென்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments