மத்திய ஆயுதப் பாதுகாப்பு படையினருக்கு வார விடுமுறை- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை?

0 1246
மத்திய ஆயுதப் பாதுகாப்பு படையினருக்கு வார விடுமுறை- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை?

த்திய ஆயுதப் பாதுகாப்புப் படையினருக்கு வார விடுமுறை அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக அனைத்து சிஏபிஎப் அதிகாரிகளிடம் தற்போதுள்ள விடுமுறைகள் மீதான பட்டியலைப் பெற்று அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதன் மீதான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை ராணுவப் படையான சிஏபிஎப் பிரிவுகளாக இருப்பது சிஆர்பிஎப், பிஎஸ்எப், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எப் ஆகியனவாகும். இந்தப் பிரிவுகளில் பணியாற்றும் வீரர்கள் நாட்டின் எல்லைகள் உள்ளிட்ட முக்கியப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்குப் போதுமான பணி விடுப்பு கிடைப்பதில்லை என்ற புகார் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments