சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா இடையே பயணிகள் ரயில் அதி வேக சோதனை ஓட்டம் : இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம்

0 8618

சென்னை சென்ட்ரல் -  ரேணிகுண்டா இடையே ரயிலில் இனி, ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செல்லும் வகையில் பணி தொடங்கி உள்ளது.

இதற்காக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவின் ரேணி குண்டா ரயில் நிலையத்திற்கு அரக்கோணம் வழியாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி, சோதனை செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. நாளை சனிக்கிழமை பகல் 1 மணிக்கு சென்ட்ரலில் இருந்து 24 பெட்டிகளுடன் புறப்படும் அதிவேக சோதனை ஓட்ட ரயில், 2.30 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ரேணி குண்டாவில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments