மீஞ்சூர் அருகே 3200 வாத்துகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

0 1913
மீஞ்சூர் அருகே 3200 வாத்துகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே மர்மமான முறையில் 3 ஆயிரத்து 200 வாத்துகள் உயிரிழந்தது குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பகுதியை சேர்ந்த தனவேல் என்பவர் சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வாத்துக்களை வளர்த்து வந்தார். நேற்று வாத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுவரை 3 ஆயிரத்து 200 வாத்துகள் இறந்துள்ளன.

இதுகுறித்து மீஞ்சூர் கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர்கள் வாத்துகள் உயிரிழந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கனமழை, குளிர் தாக்கம் காரணமாக வாத்துக்கள் உயிரிழந்திக்கலாம் என கால்நடை துறையினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments