சென்னையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் ரூ.2லட்சம் நிவாரணம் அறிவிப்பு

0 1240
சென்னையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் ரூ.2லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணத்தொகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பில், கரோலின் பிரமிளா, மகள் ஈவிலின் கெசியா ஆகியோர் இருசக்கரவாகனத்தில் சென்று நொளம்பூர் அருகே மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தது அறிந்து வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த கரோலின் பிரமிளா,ஈவிலின் கெசியா குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments