கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மேலும் ஒரு அமைச்சரை நியமித்து முதலமைச்சர் உத்தரவு

0 2721
கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மேலும் ஒரு அமைச்சரை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மேலும் ஒரு அமைச்சரை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் அதிக பாதிப்புகளை சந்தித்திருப்பதால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேலும் துரிதப்படுத்தும் பொருட்டு அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத் ஆகியோருடன் இணைந்து அமைச்சர் சி.வி சண்முகமும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments