பெங்களூரு: சிறையில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுவிக்க சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு...

0 3378
பெங்களூரு: சிறையில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுவிக்க சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு...

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வரும் ஜனவரி மாதம் 27ம் தேதியுடன் முடிவடைகிறது.

அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்தையும் கடந்த மாதம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என அவர் சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளதாகக் தெரியவந்துள்ளது. ஆனால் இதுகுறித்து சிறை நிர்வாகம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments