சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்

0 2838
சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்

சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து திமுக போட்டியிடவுள்ளது.

இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து சென்னையில்  இன்று மாலை 6.30 மணி அளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த தேர்தலில்  காங்கிரசுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புவதால் இம்முறை  குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments