என்.எல்.சி. சுரங்கத்தில் மழை நீர் சூழ்ந்தது... 2-வது நாளாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முற்றிலும் நிறுத்தம்

0 1246
என்.எல்.சி. சுரங்கத்தில் மழை நீர் சூழ்ந்தது... 2-வது நாளாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முற்றிலும் நிறுத்தம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 2-வது நாளாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்த நிலையில், என்.எல்.சி. சுரங்கங்களில் மழை நீர் சூழ்ந்து 2-வது நாளாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை புயல் வந்த போது, சுரங்கங்களில் தேங்கிய மழைநீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. இதனால், அங்குள்ள குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இதனால் சுரங்கத்தில் தேங்கிய மழைநீரை தற்போது வெளியேற்ற கூடாது, மழையளவு குறைந்தவுடன் தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments