சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உதவும் P-8 விமானம் கோவா வந்தடைந்தது

0 4044
இந்திய பெருங்கடலில் உலவும் சீன நீர்மூழ்கிகளுக்கு எமனாக இருக்கும் P-8 ரக போர் விமானத்தின் 9 ஆவது விமானம், போயிங் நிறுவனத்திடம் இருந்து கோவா வந்து சேர்ந்துள்ளது.

இந்திய பெருங்கடலில் உலவும் சீன நீர்மூழ்கிகளுக்கு எமனாக இருக்கும் P-8 ரக போர் விமானத்தின் 9 ஆவது விமானம், போயிங் நிறுவனத்திடம் இருந்து கோவா வந்து சேர்ந்துள்ளது.

நீருக்கடியில் செல்லும் எதிரி நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை கொண்டு செல்லும் திறன் இந்த விமானத்திற்கு உண்டு. இது போன்ற 8 விமானங்கள் ஏற்கனவே பெறப்பட்டு அவை கடற்படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக 4 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டதில் முதலாவதாக இந்த விமானம் வந்துள்ளது.

மேலும் 6 விமானங்கள் வாங்கப்பட உள்ளன. இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் இன்னும் சில ஆண்டுகளில் மொத்தம் 22 P-8 விமானங்களை கடற்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவும் எல்லைப்பகுதியிலும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் படைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் இந்த விமானம் உதவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments