யூட்யூபருக்கு எதிராக ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் அக்க்ஷய் குமார் வழக்கு

0 10570
யூட்யூபருக்கு எதிராக ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் அக்க்ஷய் குமார் வழக்கு

தன்னைப் பற்றி அவதூறாகச் செய்தி பரப்பியதாக யூடியூப் சேனல் உரிமையாளரிடம், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இந்தி நடிகர் அக்க்ஷய் குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

எப் எப் நியூஸ் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வரும் ரஷீத் சித்திக் என்பவர், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார்.

இந்நிலையில், சுசாந்தின் தோழி ரியா சக்ரபர்த்தி நாடு விட்டுத் தப்பிச் செல்ல அக்க்ஷய் குமார் உதவியதாக, சித்திக் வெளியிட்ட செய்திக்கு எதிராக, அக்க்ஷய் குமார் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments