செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைக்கு உபரிநீர் திறப்பு இல்லை - பொதுப்பணித்துறை அதிகாரிகள்

0 2112
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைக்கு உபரிநீர் திறப்பு இல்லை - பொதுப்பணித்துறை அதிகாரிகள்

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு, நீர் வரத்து குறைந்துள்ளதால், தற்போதைக்கு உபரி நீர் திறக்க வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம் 21 புள்ளி 27 அடியாக உள்ள நிலையில், நீர்வரத்து வினாடிக்கு 550 கன அடி வீதத்தில் இருந்து 501 கன அடி வீதமாக குறைந்துள்ளது.

நீர் வரத்து குறைய குறைய ஏரியின் நீர்மட்டமும் குறைய வாய்ப்புள்ளதால், தற்போதைக்கு உபரி நீர் திறக்கப்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments