கொட்டும் மழையிலும் ரெயின் கோட் இன்றி ”தூய்மைப் பணியில்” ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்..!

0 1780
கொட்டும் மழையிலும் ரெயின் கோட் இன்றி ”தூய்மைப் பணியில்” ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்..!

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் ரெயின் கோட் அணியாமல் தூய்மைப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடியில் காலையில் இருந்தே பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் தூய்மைப் பணியாளர்கள் இருவர், சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளி, வாகனத்தில் கொட்டும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான முகக்கவசம், ரெயின் கோட் உள்ளிட்டவை மழைக்காலம் தொடங்கும்போதே வழங்கப்பட்டுவிட்டன என்றும், அவற்றை சில பணியாளர்கள் முறையாக பயன்படுத்துவதில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments