டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு,வீடாக சென்று மருத்துவ குழுவினர் ஆய்வு..!

0 1543
டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு,வீடாக சென்று மருத்துவ குழுவினர் ஆய்வு..!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் டெல்லியில் நோயை கட்டுப்படுத்த வீடு, வீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

டெல்லியில் கொரோனா நோய் குறைந்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை புதிதாக பாதிக்கப்படுகிறார்கள். சராசரியாக 90 பேர் உயிரிழக்கின்றனர். இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார்.

இதில் தினமும் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்வும், வீடு, வீடாக மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஆய்வு பணிகள் இன்று முதல் தொடங்கி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments