பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு..!

0 3279
பீகார் முதலமைச்சராக 7 வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார்.

பீகாரின் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பொறுப்பேற்றார்.

பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பாகு சவுகான் (Phagu Chauhan) அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பாஜக சார்பில் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள தக்ரிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பதவி ஏற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், பாஜக, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, விகாசீல் இன்சாம் கட்சியை சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments