உ.பி யில் இனி எந்தவொரு பெரிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது - அகிலேஷ் யாதவ்

0 3586
உ.பி யில் இனி எந்தவொரு பெரிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது - அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேசத்தில் இனி, எந்தவொரு பெரிய கட்சிகளுடனும்  கூட்டணி வைக்கப்போவதில்லை என சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2022 சட்டப் பேரவை தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டு உள்ள அவர், காங்கிரஸ், பகுஜன்சமாஜ் என எந்தவொரு கட்சிகளின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 

தனது சித்தப்பா சிவ்பால் யாதவ்வின் கட்சியுடன் கூட்டணி உண்டு என்றும்,  உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி மீண்டும் மலர்ந்தால், அமைச்சரவையில் சிவ்பால் யாதவ்வுக்கு இடம் அளிக்கப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments